வட்டார வழக்கு மொழிகளில் தமிழ்



ஓரெழுத்துப் பிழையிலே
     ஓய்ந்த நீங்கள் பாண்டியன்
ஓயாமல் பிழைக்கிறோம்
      நாங்களோ ஏழு கோடியன்

கொள்ளையடித்த தமிழையே
       கொன்று நாம் பார்க்கிறோம்
வெள்ளையடித்த நம்மையே
       கொள்ளி வைத்துக்               
                                - கொள்கிறோம்

கீழடி புதுமைதான் என்ன - பல
    கிறுக்கலின் பெயர்கள்தான்                                                   -என்ன
கிளரிடும் உண்மைதான் என்ன                                                      -- அவை
     கிடைத்தும் தவிக்கிறாய் நீ
                                தமிழனாயென்ன

பாதியில் அழிந்தது பழமைத்தமிழ்
      வியாதியில் அழுகுது                                                             -இனியத்தமிழ்
பெயரிலே சிறக்குது புதியத்தமிழ்
       பிறவியில் குலைந்தது                                                           -அழகுத்தமிழ்

அந்திவானின் அழகே தமிழ்                                                                 - உனை
     அழகாய் சுரக்கும் என் உமிழ்
அன்புமொழிக்காய் வருவேன்                                              திகில் - ஒரு
     அன்னியனாய் எழுவேன் நீ மகிழ்

வீரம் கொண்ட நாம்தான் - நேற்று
    விரியன் பாம்பாய் போனோம்
மீதம் உள்ள நாம்தான் - இனி
    நீரின் ஊற்றாய் வாழ்வோம்....


                   தமிழ் வாழ்க!!

Comments

Post a Comment

Nice